கோமா நிலையில் இருக்கும் போது கூட மூளை சிந்தித்து செயல்படும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
கனடாவை சேர்ந்த ஸ்காட்ரட்லி என்பவர் விபத்தில் சிக்கி கடந்த 12 ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்தார்.
அப்போது சில நேரங்களில் கண்களை திறந்தும், கைகளை அசைத்தும் ஏதோ சொல்ல முயற்சிப்பதாக அவரை கவனித்து வந்த உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து இங்கிலாந்தை சேர்ந்த பிரபல நரம்பியல் நிபுணர் அட்ரியன் ஓவன் அவரை ஆய்வு செய்தார்.
மேலும் ஸ்காட்ரட்லியிடம் சில கேள்விகளை கேட்டு, அதனை நவீன ஸ்கேன் மூலம் பரிசோதித்தார்.
அந்த ஸ்கேனில் மருத்துவர் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் ஸ்காட்ரட்லி பதில் அளிப்பது பதிவாகி இருந்தது.
உங்களுக்கு உடல் வலிக்கிறதா? தற்போது கொடுக்கும் சாப்பாடு பிடிக்கிறதா? போன்ற கேள்விக்கு மூளை சிந்தித்து பதில் அளித்தது.
மேலும் தன்னை சுற்றி நடக்கும் விஷயங்களையும், இருக்கும் சூழ்நிலைகளையும் மூளை புரிந்து கொண்டது.
இதேபோன்று பல ஆண்டுகளாக கோமாவில் இருந்த ஸ்டீவன் கிரகாம் என்பவரையும் பரிசோதித்ததில், மூளை சிந்தித்து செயல்பட்டது தெரியவந்தது.