சமீபத்தில் சர்வதேச அளவில் ஒரு நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. அதில் உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாக்கப்படுகிறது. அதாவது 200 கோடி டன் உணவு பொருட்கள் வீணாகின்றன. அவற்றை பாதுகாக்க போதுமான வசதி மற்றும் கட்டமைப்பு வசதி இல்லாததே காரணம் என கூறப்படுகிறது.
இவை தவிர பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை குறிப்பிட்ட நாட்களுக்குள் விற்க வேண்டிய கட்டாய சூழ்நிலை. மேலும் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்பன போன்றவைகளால் உணவு பொருட்கள் வீணாகின்றன.
இந்தியாவை பொறுத்தவரை இங்கு உற்பத்தியாகும் பழங்கள், காய்கறிகள் மற்றும் உணவு தானியங்களில் 40 சதவீதம் வீணடிக்கப்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
நன்றி :மாலைமலர்