1."பொதுக் கூட்ட மேடையிலே ஏன் தீப்பிடிச்சிருக்கு?" "தலைவர் அனல் பறக்கப் பேசினாராம்!"
2.உன் போட்டோவா இது...எனக்கே சந்தேகமா இருக்கு...
(மனைவி): என் மேலே இருக்கிற சந்தேகம் எப்பதான் உங்களுக்குத் தீரப் போகுதோ.
3.மனுஷனாப் பொறந்தா வாழ்க்கையில ஏதாவது பெரிசா சாதிக்கணும்... நல்லவேளை…நான் கொழந்தையாத் தான் பொறந்தேன்
3.இன்று மழை வரும்னு செய்தியில சொன்னாங்க. .. நீங்க கேட்டீங்களா? ... நான் கேக்கல. அவங்களாதான் சொன்னாங்க
4.போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது?
டிரைவர்: அதான் எனக்கும் புரியல சார்... நான் நல்ல தூக்கத்தில இருந்தேன்.
5.பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்
எப்படி?
ரொம்ப நாளா ஒரு திருடன் கரெக்டா நாங்க டி.வி. சீரியல் பார்க்கும் போது வந்து வந்து திருடிக்கிட்டு இருந்தான். ஒரு நாள் கரண்ட் இல்லாத சமயம் அவனை பிடிச்சிட்டோம்.