குளிர்காலத்தில் ஏற்படும் சளித்தொல்லை போன்ற நோய்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க பீர் கொடுக்கலாம் என ஜப்பான் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஜப்பானை சேர்ந்த சபோரா மருத்துவ பல்கலைகழக விஞ்ஞானிகள் குழந்தைகள் சளித்தொல்லையால் பாதிக்கப்படுவது குறித்து ஆய்வு நடத்தினர்.
ஆய்வின் முடிவு குறித்து ஆய்வாளர்கள் ஜுன் புஜிமோடோ கூறுகையில், தாவர வகையிலிருந்து தயாரிக்கப்படும் பீர் பானத்தில் ஹுமுலோன் என்ற முக்கிய மூலப்பொருள் உள்ளது.
பீரின் கசப்பு சுவைக்கு இதுதான் காரணம். இது சிறுவர்களுக்கு ஏற்படும் நிமோனியா, மார்புச்சளி போன்ற நோய்களை ஏற்படுத்தும் வைரஸ் கிருமிக்கு எதிராக செயல்படுகிறது.
ஆர்எஸ் வைரஸ்(ரெஸ்பிரேட்டரி சின்சைடியல் வைரஸ்) என்ற ஒரு வகை வைரஸ்தான் கடுமையான நிமோனியா, சுவாச பிரச்னைகளை குழந்தைகளுக்கு ஏற்படுத்துகின்றன.
இந்த வைரஸை ஹுமுலோன் கட்டுப்படுத்துகிறது என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது என்றார்.
மேலும் குழந்தைகள் மட்டுமல்லாது இந்த வைரஸ் பெரியவர்களுக்கு சளி பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.
பீர் பானத்தில் மிக குறைந்த அளவே ஹுமுலோன் உள்ளது. ஒருவர் 30 கேன் பீர் குடித்தால் தான் இந்த வைரஸை எதிர்க்கும் அளவுக்கு எதிர்ப்பு சக்தி உருவாகும்.
எனவே, இந்த ஹுமுலோன் என்ற மூலப்பொருளை உணவுப் பொருட்கள் மற்றும் ஆல்கஹால் கலக்காத பொருட்கள் மூலம் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது.
அதன் கசப்பு சுவையை குழந்தைகள் ஏற்க செய்வதும் சவாலாக உள்ளது. தீக்காயத்தை தணிக்கும் வல்லமையும் ஹுமுலோன் மூலப் பொருளுக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.