பணித்திறன் குறைந்த வேலைகளைச் செய்வதற்கான ரோபோக்களைத் தயாரிப்பதற்கு அபுதாபியில் உள்ள துபாயைச் சேர்ந்த ராயல் குழும நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்த நிறுவனம் ஒரு மாதத்திற்குள் 12 ரோபோக்களை திட்டமிட்டு தயாரிக்கவுள்ளதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ராயல் குழுமத்தின் அங்கமான பார்சிலோனாவைச் சேர்ந்த பிஏஎல் ரோபாட்டிக்ஸ் இது தொடர்பான ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி வந்ததன் பயனாக வர்த்தக ரீதியில் மனித உயரத்திலான ரோபோக்களை உருவாக்கியுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்நிறுவனம் மணிக்கு 5 கி.மீற்றர் வேகத்தில் செல்லக்கூடிய ரீம் எனப்படும் 1.65 மீட்டர் உயரமுள்ள ரோபோக்களை அறிமுகப்படுத்தியது.
இந்த ரோபோக்களால் திறமையான பணியாளர்களுக்குப் பதிலாக இதைப் பயன்படுத்த முடியும். இதன் மூலம் பொருடுகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குக் கொண்டு செல்ல பயன்படுத்தலாம்.
அபுதாபியில் நடைபெற்ற தேசிய கண்காட்சியில் ஒன்றில் இந்த ரோபோவின் செயல்பாடு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இதனைத் தொடர்ந்து 20 ரோபோக்களுக்கு உடனடியாக பதிவு செய்யப்பட்டது.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மாதத்துக்கு 12 ரோபோக்களை உற்பத்தி செய்யும் திறன் இந்த கொண்டதாக இந்த ஆலையின் உற்பத்தித் திறன் உயர்த்தப்படும் என்று நிறுவனத்தின் சந்தைப்பிரிவு மேலாளர் ஜோரியென் குய்ஜ் தெரிவித்தார்.
இப்போது இந்நிறுவனம் தயாரிக்கும் ரோபோக்கள், வணிக வளாகங்கள், கண்காட்சி மையங்களில் பயன்படுத்தப்படுகின்றன. அடுத்த கட்டமாக மருத்துவமனைகள், விமான நிலையங்களில் பயன்படுத்தும் அளவுக்கு இதன் செயல்பாட்டை உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்