*அதிகாலை வெறுங்கால்களால் (பாதணி அணியாமல்)திறந்த
வெளியில் நடக்க வேண்டும்.பூமியின் ஆகர்ஷண சக்தி கால்
வழியாகச் சென்று உடலில் உள்ள நோய்களைப் போக்கும் உள்ளத்தில் உள்ள மிருக உணர்ச்சிகளையும் போக்கும்.
*படுக்கச் செல்லும் முன்பாக திகில் காட்சிகள்,சண்டைக் காட்சிகள் ஆகியவற்றை டெலிவிஷனில் பார்க்கக் கூடாது.===
மெல்லிய இசை கேட்பது உறக்கத்தை உண்டு செய்யும் ==
*நடப்பதால் உள் உறுப்புகள் சரிவர இயங்கி அதனால் இரத்த ஓட்டம்
அதிகரிக்கப்பட்டு கழிவுப் பொருட்கள் வெளியேற்றப்படுகிறது.
ரத்தத்தில் நச்சுத் தன்மை சேர்வதும் குறைகிறது====
*பொழுது விடியும் பொழுது குளிப்பது நல்லது நடுத்தரமான பலன்
கொடுக்கும்.சூரிய உதயத்திற்குப் பின் குளிப்பதால் உடலில் அழுக்குகள் தான நீங்குமே தவிர மருத்துவ குணங்கள் ஏதும் கிடைக்காது===
*பயணம் செய்யும் பொழுது அதிர்ச்சி இருந்தால் படிக்க கூடாது.
இதனால் கண் கெடும்.படிக்கும் சமயம் முதுகுத் தண்டு வளையக்
கூடாது.படிக்கும் சமயம் வெளிச்சம் புத்தகத்தின் மீது விழ வேண்டும் .நம் கண்கள் மேல் விழக் கூடாது.
*பசு நெய் தீபம் ஏற்றினால் அத்தீபம் குளிர்ந்தபின் 12 மணி
நேரம் அதன் ஆன்மீக சக்தி நீடிக்கும்
*மகிழ்ச்சியுடன் தானம் செய்ய வேண்டும்.அப்பொழுதுதான் அந்த
தானம் பலிக்கும்.இதனால் மேலும் தானம் செய்ய பெரும் செல்வம் கிடைக்கும்.
*வயிறுபுடைக்கச் சாப்பிட்டுவிட்டு இரவில் படுக்கக் கூடாது.
சற்று நடைபழகிவிட்டு வயிறு இலேசானவுடன் படுத்தால்
உறக்கம் நன்றாக வரும்.
*வெள்ளிக்கிழமை அன்று உப்பு வாங்குவது சிறப்பு.இதனால் சகல
செல்வங்களும் சேரும்.
*உட்கார்ந்திருக்கும் பொழுது காலாட்டுதல்,துடையை ஆட்டுதல்
கூடாது.அதனால் நம் சக்தி விரயமாகிறது
*இரவில் பின்பகுதியில் உறங்குவதைக் காட்டிலும் முன் பகுதியில்
உறங்குவது ஆரோக்கியத்திற்கு நல்லது.
*கடவுள் மனிதனை பூமிக்கு அனுப்பும்போது ஒன்றே ஒன்றைத்தான் சொல்லி அனுப்பினான்.நீ திரும்பவும் மனிதனாக
வராதே!தெய்வமாக வா ..என்பதே==
*உன் தகுதி பிறருக்கு தெரிய வேண்டுமானால்,பிறர் தகுதியை
நீ அறிந்து கொள் !
நன்றி :வாழ்க வளமுடன்.