இன்றைய காலத்தில் இரத்த அழுத்தத்தினால் அதிக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை வயதானவர்கள் தான் பாதிக்கப்பட்டார்கள். ஆனால் தற்போது இளம் வயதினரும் அதிகமாக இந்த பிரச்சனைக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவை அனைத்திற்கும் காரணம் வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள், உணவு முறைகள் போன்றவைகளே ஆகும்.
1. மன அழுத்தம் மற்றும் இறுக்கம் கூட இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். ஆகவே மன அழுத்தம் ஏற்பட்டால், சிறிது நேரம் எதனால் இது ஏற்படுகிறது என்று யோசித்து பார்த்து, அதனை சரிசெய்தால் மன அழுத்தத்தை குறைக்கலாம்.
மன அழுத்தம் ஏற்பட்டாலே மூச்சை உள் வாங்கி- வெளிவிடுதல், யோகா, தியானம் போன்றவற்றை செய்தால், மனமானது சற்று ரிலாக்ஸ் ஆகும்.
2. இரத்த அழுத்தம் உடல் எடையைப் பொறுத்தது. உடல் எடை அதிகமானால், இரத்த அழுத்தமும் அதிகமாகும். ஆகவே உடல் எடையில் கவனமாக இருக்க வேண்டும்.
3. தினமும் குறைந்தது 30 நிமிடம் உடற்பயிற்சி செய்தால், இரத்த அழுத்தம் குறையும்.
4. இரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் உண்ணும் உணவுகளில் தானியங்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள் போன்றவற்றை சாப்பிட வேண்டும். அதிலும் பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவது மிகுந்த நன்மையைத் தரும்.
5. உப்பில் சோடியம் அதிகம் இருக்கும். ஆகவே உணவில் உப்பை சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் உப்பு அதிகம் உள்ள எந்த ஒரு உணவையும் அறவே தவிர்ப்பது நன்மையைத் தரும்.
6. மிக முக்கியமாக ஆல்கஹால், புகைப்பிடித்தல் போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.