துருக்கி கால்பந்தாட்ட போட்டி சர்ச்சை - விசாரணை ஆரம்பம்! [You must be registered and logged in to see this image.]துருக்கியில் இடம் பெற்ற இரு சர்ச்சைக்குரிய கால்பந்தாட்ட போட்டிகள் தொடர்பான விசாரணைகளை சர்வதேச கால்பந்து சம்மேளனம் ஆரம்பித்துள்ளது.
கடந்த வார இறுதியில் நடைபெற்ற இப் போட்டிகளில் பொலிவியா-லத்வியாவை 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி கொண்டது.
பல்கேரியா-எஸ்டோனியா அணிகளுக்கிடையிலான போட்டி 2-2 என்ற கோல்கள் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
இவ்விரு போட்டிகளிலும் பெறப்பட்ட ஏழு கோல்களும் பெனால்டி முறையிலேயே பெறப்பட்டது.
இவ் விடயமே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதை உறுதிப்படுத்திய சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் பேச்சாளர், போட்டியில் பங்கு பற்றிய நான்கு நாடுகளினதும் காலபந்து சம்மேளனங்களின் அறிக்கைகளை தாம் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.