[You must be registered and logged in to see this image.]வணிகமே உன்னை புரிந்த நாள் முதல்
நீ ஓர் லட்சியமாய் என் மனதில்
உன்னை அடைவதற்காய்
என் சொத்துக்கள் எல்லாம் மூலதனமாய்
என்று அதிகரித்து விட்ட போது
செலவாச்சு .........................
அவை குறைந்து விட்டால்
வரவாகி விடும்
கல்வி என்னும் சொத்து நம் வாழ்க்கையில்
அதிகரித்தால் வரவாகியும்
குறைந்தால் செலவாகியும் விடும்
உன்னை அடைவதட்காய் என் தந்தை தந்த
பணமெல்லாம் திருப்பி செலுத்த வேண்டியன
அவையெல்லாம் பொறுப்புக்கள்
என அதிகரித்து விட்டால்
செலவாகிடும்
குறைந்து விட்டால் வரவாகிவிடும்
உலகம் சுரூங்கிட செலவுகள் அதிகரிக்கும்
அவை வரவாகிடும் குறைந்து விட்டால்
செலவாகிடும்..................
உன்னை அடைந்த பின் நீ தரும்
சம்பளம் எல்லாம் வருமானமே
அவை அதிகரித்ததால் செலவாகியும்
குறைந்தால் வரவாகியும் விடும்
இவை எல்லாமே வணிகமே உனக்காய்
பெசிஜோலி தந்த இரட்டை பதிவு
தத்துவம் என்றாய் ஆனாலும்
இன்று எனக்கு இது புரியாத ஒன்று