நச்சுத்தன்மையுள்ள காபனீரொட்சைட் கசிவு தொடர்பான புதிய விடயங்கள்! நிலவறையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ள காபனீரொட்சைட் கசிந்து வருவதாக வெளியான தகவல்களில் உண்மைகள் எதுவும் இல்லை என்றும், இது தவறான விளக்கங்களுடன் கூடியது என்றும் அது சம்பந்தமாக நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவில் தெரிவிக்க்ப்பட்டுள்ளது.
பச்சைவீட்டு வாயுக் கசிவைக் குறைப்பதற்கு அரசாங்கமும் ஏனைய கைத்தொழில் துறையினரும் மேற்கொண்டு வரும் பிரதான முயற்சிகளை தவிடுபொடியாக்கும் வகையில் இந்த வாயுக் கசிவு பற்றிய அறிக்கைகள் அமைந்திருந்தன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாயுக் கசிவு தொடர்பான ஆய்வினை மேற்கொண்ட சஸகாச்வன் பெற்றோலியம் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையத்தின் திட்ட முகாமையாளர் ஸ்டீவ் விட்டகர் இந்தத் தகவல்களும் தரவுகளும் முற்றிலும் தவறான விளக்கங்களுடன் கூடியவை என்று தெரிவித்துள்ளார்.
வீபர்னுக்கு அருகில் உள்ள உலகின் மிகப்பபெரிய காபன் களஞ்சியத்தை இந்த நிறுவனமே மேற்பார்வை செய்து வருகின்றது. தர்க்க ரீதியில் எந்த வகையிலும் ஆதரிக்க முடியாத கருத்துக்களே இவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் சர்ச்சைக்குரிய இந்தக் களஞ்சியம் அமைந்துள்ள காணியின் அருகில் உள்ள காணிகளின் உரிமையாளர்களின் சட்டத்தரணிகள் இன்னும் பதில் அளிக்கப்படவேண்டிய கேள்விகள் எஞ்சியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பகுதி மக்கள் தமது பிரதேசத்தில் காபனீரொட்சைட் படிவுகள் பரவலாகக் காணப்படுவதாகத் தரிவித்துள்ளனர்.
அதனையடுத்தே பிரதேச மக்கள் சார்பாக இந்த விவகாரத்தைக் கையாண்டு வரும் சட்டத்தரணிகள் இங்குள்ள நிலவறைக் களஞ்சியத்திலிருந்து காபனீரொட்சைட் கசிந்து வருவதாக குற்றம் சாட்டி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக மறுப்புக்கள் வெளியாகியுள்ள போதிலும் அதை ஏற்க இந்த சட்டத்தரணிகள் மறுத்துள்ளனர்.