கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
சிங்கப்பூர் Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
சிங்கப்பூர் Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
சிங்கப்பூர் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
சிங்கப்பூர் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
சிங்கப்பூர் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
சிங்கப்பூர் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
சிங்கப்பூர் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
சிங்கப்பூர் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
சிங்கப்பூர் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
சிங்கப்பூர் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
சிங்கப்பூர் Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
சிங்கப்பூர் Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
சிங்கப்பூர் Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
சிங்கப்பூர் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
சிங்கப்பூர் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
சிங்கப்பூர் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
சிங்கப்பூர் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
சிங்கப்பூர் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
சிங்கப்பூர் Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
சிங்கப்பூர் Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 சிங்கப்பூர்

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

சிங்கப்பூர் Empty
PostSubject: சிங்கப்பூர்   சிங்கப்பூர் Icon_minitimeWed Jan 09, 2013 4:29 pm

சிங்கப்பூர் Singap10

சிங்கப்பூர் அதிகாரபூர்வமாக சிங்கப்பூர் குடியரசு (The Republic of Singapore, சீனம்: 新加坡共和国, Xīnjīapō Gònghéguó; மலாய்: Republik Singapura)தென்கிழக்காசியாவில் உள்ள ஒரு தீவு நாடு. மலேசியத் தீபகற்பத்தின் தென் முனையில் அமைந்துள்ளது, ஜொகூர் நீர்ச்சந்தி இதனை மலேசியாவிடமிருந்துபிரிக்கிறது. தெற்கில் சிங்கப்பூர் நீர்ச்சந்தி இந்தோனேசியாவின் ரியாவு தீவுகளைப் பிரிக்கின்றது. சிங்கப்பூர் பெரிதும் நகரமயம் ஆக்கப்பட்டுள்ளது.
மிகக்குறைவான அளவிலேயே மழைக்காடுகள் உள்ளன. ஆனாலும் நிலச்சிரமைப்பு மூலம்
மேலதிக நிலங்கள் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டுள்ளன.

கிபி 2 ஆம் நூற்றாண்டில் மனிதக் குடியேற்றம் தொடங்கிய நாளில் இருந்து
சிங்கப்பூர் பல உள்ளூர் இராச்சியங்களின் பகுதியாக விளங்கி வந்துள்ளது. 1819ஆம் ஆண்டில் ஜொகூர் சுல்தானகத்தின் அனுமதியுடன் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் சிங்கப்பூரைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. 1824 இல்பிரித்தானியாவின் நேரடி ஆட்சியினுள் கொண்டு வரப்பட்டது. 1826 இல்தென்கிழக்காசியாவின் ஒரு பிரித்தானிய குடியேற்ற நாடாக ஆக்கப்பட்டது.இரண்டாம் உலகப் போரின் போது சப்பானியர்களால் சிறிது காலம் ஆக்கிரமிக்கப்பட்ட சிங்கப்பூர் மறுபடியும் 1945ல் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வந்து பிறகு 1963ல் ஏனைய பிரித்தானிய குடியேற்றப் பகுதிகளோடு சேர்ந்துமலேசியாவோடு இணைக்கப்பட்டு பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை அடைந்தது. 1965 ஆகத்து 9 இல்
மலேசியாவில் இருந்து பிரிந்து, விடுதலை பெற்று தனிக் குடியரசு நாடாக
உருவானது. அன்றில் இருந்து சிங்கப்பூரின் வளம் பெருமளவு விரிவடைந்து நான்கு ஆசியப் புலிகளில் ஒன்றானது.

சிங்கப்பூர் வெஸ்ட்மின்ஸ்டர் மக்களாட்சி முறைமையில் ஓரங்க நாடாளுமன்றக் குடியரசு ஆட்சியைக் கொண்டுள்ளது. 1959 ஆம் ஆண்டு முதல் மக்கள் செயல் கட்சி அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று ஆட்சி நடத்தி வருகிறது.

கொள்வனவு ஆற்றல் சமநிலையின் அடிப்படையில், சிங்கப்பூரின் தனிநபர் வருமானம் உலக
நாடுகளில் மூன்றாவது நிலையில் உள்ளது. சிங்கப்பூரின் மக்கள்தொகை 5
மில்லியனுக்கும் சற்று அதிகமானதாகும். இவர்களில் 2.91 மில்லியன் உள்ளூரில்
பிறந்தவர்கள். மக்கள்தொகையில் பெரும்பாலானவர்கள்சீனர்கள். இவர்களுக்கு அடுத்ததாக மலாய், மற்றும் சிங்கப்பூர் இந்தியர்கள்உள்ளனர். சிங்கப்பூரின் அதிகாரபூர்வ மொழிகள்: ஆங்கிலம், சீனம், மலாய் மொழி,தமிழ் மொழி ஆகியவையாகும். சார்க் அமைப்பை நிறுவிய நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரில் ஏப்பெக் அமைப்பின் செயலகம் அமைந்துள்ளது. அத்துடன்,கூட்டுசேரா இயக்கம், பொதுநலவாய நாடுகள் ஆகிய அமைப்புகளிலும் உறுப்பு நாடாக உள்ளது.

மிகவும் சிறிய பரப்பளவு கொண்ட சிங்கப்பூர், தென்கிழக்காசியாவில்
மிகச்சிறிய நாடாகும். விடுதலைக்கு பின் நடந்த பல்வேறு பொருளாதார
மாற்றங்களினாலும், அரசின் துணையோடு தன் உட்கட்டுமானத்தினை தரப்படுத்திக்
கொண்டதாலும், சிங்கப்பூர் மக்களின் வாழ்க்கை தரம் பன்மடங்கு உயர்ந்துள்ளது.

பெயர்க்காரணம்

சிங்கப்பூர் சிங்கம் +ஊர் = சிங்கப்பூர், அதாவது சிங்கத்தின் ஊர் என்ற தமிழ் பொருளை கொண்டதும் ஆகும். சிங்கப்பூர் என்ற பெயர்சிங்கப்பூரா என்ற மலாய் சொல்லிலிருந்து மருவியதாகவும் கூறப்படுகிறது. மலாய் சொற்களான சிங்கா (சிங்கம்) மற்றும் பூரா (ஊர்) சேர்ந்து சிங்கப்பூரா என்று அழைக்கப்படுகிறது. மலாய் வரலாற்றின்படி 14ம் நூற்றாண்டு சுமாத்திரா மலாய்
இளவரசர் சாங் நிலா உத்தமா, ஒரு கடும் புயலின் போது இந்த தீவில்
ஒதுங்கினார். அப்போது அவர் சிங்கம் போல ஒரு மிருகத்தை பார்த்து, சிங்கம்
என்று தவறுதலாக நினைத்துக்கொண்டு சிங்கபூரா என்று அழைத்ததாக
வரலாற்றுக்கதையும் உண்டு.

வரலாறு

முந்தைய வரலாறு

சிங்கப்பூரின் வரலாறு 14 ஆம் நூற்றாண்டிலிருந்து குறிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு முன் சிங்கப்பூரும் மலேசியாவும் கடாரம்கொண்ட சோழ மண்டலத்தின் ஆட்சிக்கு உட்பட்டிருக்கலாம் என்று தமிழ்நாட்டின் வரலாறு காட்டுகிறது. 14ம் நூற்றாண்டில் அதுதுமாசிக் என்ற பெயர் கொண்ட நகரமாக காட்சியளித்தது. அது சுமாத்திராவில் இயங்கிய ஸ்ரீ விஜயப் பேரரசின் ஆட்சிக்கு உட்பட்டது. சிங்கை தீவில் ஒரு நகரம் இருந்தது என்றும் அந்த நகரம் தென்கிழக்காசியாவில் ஒரு முக்கிய வர்த்தக மையமாக விளங்கியது என்று மலாய் மக்களின் வரலாறு கூறுகிறது.

ஸ்ரீவிஜய பேரரசு மறைந்த பிறகு, துமாசிக் மற்ற அரசுகளால் தாக்கப்பட்டது. ஜாவாவில் இருந்த மாஜாபாஹித் பேரரசு,தாய்லாந்தில் இயங்கிய அயுத்திய அரசு போன்றவை
அந்த நகரை தம் ஆட்சிக்குள் கொண்டு வர முயன்றன. தாய்லாந்தின் அயுத்திய அரசு
குறைந்தது ஒரு முறை துமாசிக் தீவைத் தாக்க முயன்று தோல்வி அடைந்தது என்று
வரலாறு காட்டுகிறது. அந்நேரத்தில் - 15ம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் – துமாசிக் நகருக்கு “சிங்கப்பூரா” என்ற புதிய பெயர் சூட்டப்பட்டது.

தொமஸ் ஸ்டேம்ஃபர்ட் ராஃபிள்ஸ்

1819 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் நாள், சர் தாமஸ் ஸ்டாம்போர்ட் ராபிள்ஸ்
என்பார் தலைநிலப்பகுதியில் வந்து இறங்கினார். இப்பகுதியின் புவியியல்
அமைவிட முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்ட அவர், வணிக நிலையொன்றை
அமைப்பதற்காக 1819 பெப்ரவரி மாதம் 6 ஆம் தேதி சுல்தான் ஹுசேன் ஷாவுடன் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி சார்பில்
ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டார். இவ்வொப்பந்தப்படி சிங்கப்பூரின்
தெற்குப்பகுதியில் வணிக நிலையொன்றையும், குடியேற்றம் ஒன்றையும் அமைக்கும்
உரிமையைப் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி பெற்றுக்கொண்டது. ஆகஸ்ட் 1824
ஆம் ஆண்டுவரை சிங்கப்பூர் மலே ஆட்சியாளரின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாகவே
இருந்தது. ஆகஸ்ட் 1824ல் பிரித்தானியா முழுத்தீவையும் தனது
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தபோது சிங்கப்பூர் ஒரு பிரித்தானியக்குடியேற்றநாடு ஆகியது.
சிங்கப்பூரிலிருந்த இரண்டாம் வதிவிட அதிகாரியான ஜான் குரோபுர்ட் என்பவரே
சிங்கப்பூரை பிரித்தானியாவுக்கு உரியதாக்கியவர். இவர் 1824 ஆகஸ்ட் 2 ஆம்
தேதி சுல்தான் ஹுசேன் ஷாவுடன் ஒப்பந்தமொன்றைச் செய்தார். இதன் அடிப்படையில்
சுல்தான் தீவு முழுவதையும் பிரித்தானியாவுக்குக் கையளித்தார். இதுவே நவீன
சிங்கப்பூரின் தொடக்கம் எனலாம். ராபிள்சின் உதவி அதிகாரியான வில்லியம் பர்குகார் (William
Farquhar) சிங்கப்பூரின் வளர்ச்சியையும், பல்லின மக்களின் உள்வருகையையும்
ஊக்கப்படுத்தினார். இந்த உள்வருகை கட்டுப்பாடற்ற வருகுடியேற்றக் கொள்கை
காரணமாக ஏற்பட்டது. 1856 ஆம் ஆண்டிலிருந்து பிரித்தானிய இந்திய அலுவலகம்
சிங்கப்பூரை ஆட்சிசெய்தது. ஆனால் 1867 ஆம் ஆண்டில், சிங்கப்பூர், மக்கள்
பிரித்தானியாவின் முடிக்குரிய குடியேற்ற நாடாக,
பிரித்தானிய அரசரின் நேரடி ஆட்சியின்கீழ் கொண்டுவரப்பட்டது. 1869 ஆம்
ஆண்டளவில் சுமார் 100,000 மக்கள் இத்தீவில் வாழ்ந்தனர். சிங்கப்பூரின்
முதலாவது நகரத் திட்டமிடல் முயற்சி ஒரு பிரித்தாளும் உத்தியாகவே
மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டப்படி தீவின் தெற்கு பகுதியில் வெவ்வேறு இன
மக்கள் தனித்தனிப் பகுதிகளில் குடியேற்றப்பட்டனர்.

சிங்கப்பூர் ஆறு

பல்வேறு இனக்குழுக்களைச் சேர்ந்த வணிகர்களும், வங்கியாளர்களும் நிறைந்த
பகுதியாக விளங்கியது. சீன, இந்தியக் கூலித் தொழிலாளர்கள் படகுகளில்
பொருட்களை ஏற்றியிறக்கும் வேலை செய்துவந்தனர். மலாயர்கள் பெரும்பாலும்மீனவர்களாகவும், கடலோடிகளாகவும் இருந்தனர்.
அராபிய வணிகரும், அறிஞர்களும் ஆற்றுக் கழிமுகத்தின் தென்கிழக்குப்
பகுதியில் வாழ்ந்தனர். அக்காலத்தில் மிகவும் குறைவாகவேயிருந்த ஐரோப்பியக்
குடியேற்றக்காரர் கானிங் ஹில் கோட்டைப் பகுதியிலும், ஆற்றின் மேல்
பகுதிகளிலும் வாழ்ந்தனர். ஐரோப்பியரைப் போலவே இந்தியர்களும் தீவின்
உட்பகுதியிலேயே குடியேறினர். இன்று சின்ன இந்தியா என்று அழைக்கப்படும்
பகுதி இருக்கும் இடமே இது. விடுதலைக்குப் பின்னர் 1960களில்
பெருமெடுப்பிலான மீள்குடியெற்ற நடவடிக்கைகளின்போது அறிபப்பட்டது தவிர,
அக்காலத்தின் நாட்டுப்புறத் தனியார் குடியேற்றங்கள் பற்றி மிகக்குறைவாகவே
அறியவருகிறது.

உலகப்போர்

பினாங்கு, மலாக்கா ஆகிய
நகரங்களுடன் சிங்கப்பூர் நீரிணைக் குடியேற்றங்களின் (Straits Settlements)
ஒரு பாகமாக இருந்தது. சப்பானியருடைய எழுச்சிக்குப் பல ஆண்டுகளுக்கு
முன்னரே அவர்கள் வேகமாகத் தமது படைகளைப் பெருக்கிவருவதைப் பிரித்தானியா
அறிந்திருந்தது. தென்கிழக்காசியாவில் இருந்த தமது சொத்துக்களைப்
பாதுகாப்பதற்காக சிங்கப்பூரின் வட முனையில் கடற்படைத் தளம் ஒன்றை
அமைப்பதற்குப் பிரித்தானியா முடிவு செய்திருந்தது. ஆனால் ஜெர்மனியுடன் ஏற்பட்ட போரினால் போர்க் கப்பல்களையும், தளவாடங்களையும் ஐரோப்பாவுக்குக் கொண்டுவரவேண்டி இருந்ததனால் இத் திட்டம் நிறைவேறவில்லை. இரண்டாம் உலகப் போரின் போது சப்பானியப் படைகள்(ஜப்பன் படைகள் ) மலாயாவைக் கைப்பற்றிக்
கொண்டன. அப்படைகள் சிங்கப்பூரைத் தாக்கியபோது, பெரும்பாலான தமது படைகளை
ஐரோப்பாவுக்கு அனுப்பிவிட்டுக் குறைந்த படைபலத்துடன் இருந்த பிரித்தானியர் 6
நாட்களில் தோல்வியடைந்ததுடன், புகமுடியாதது என்று சொல்லப்பட்ட
கோட்டையையும் 1942 பெப்ரவரி 15 ஆம் தேதி சப்பானியத் தளபதி தொமோயுக்கி யாமாஷித்தாவிடம் (Tomoyuki
Yamashita) ஒப்படைத்துச் சரணடைந்தனர். இத்தோல்வியை “பெரும் இழப்பு”
என்றும் “பிரித்தானிய வரலாற்றில் மிகப்பெரிய சரணாகதி” என்றும் அப்போதைய
பிரித்தானியப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் குறிப்பிட்டார். சிங்கப்பூரின்
கடற்படைத் தளத்தை சப்பானியர் பயன்படுத்தாமல் இருப்பதற்காக, அது
சப்பானியரிடம் வீழ்ச்சியடையு முன்பே அழிக்கப்பட்டுவிட்டது. சப்பானியர்
சிங்கப்பூரின் பெயரை “ஷோவாவின் காலத்தில் பெறப்பட்ட தெற்குத் தீவு” என்னும்
சப்பானியத் தொடரைச் சுருக்கி “ஷொனான்டோ” என மாற்றினர். உலகப் போரில்
சப்பானியர் தோல்வியுற்ற ஒரு மாதத்தின் பின்னர் 1945 ஆம் ஆண்டு செப்டெம்பர்
மாதம் 12 ஆம் தேதி சிங்கப்பூர் மீண்டும் பிரித்தானியரின் ஆட்சியின் கீழ்
கொண்டுவரப்பட்டது.

சிங்கப்பூர் துறைமுகம்

1959 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் பிரித்தானியப் பேரரசினுள் ஒரு தன்னாட்சி பெற்ற நாடானது. யூசோஃப் பின் இசாக் என்பவர் நாட்டுத் தலைவராகவும், லீ குவான் யூ பிரதமராகவும் ஆயினர். 1963 ஆகஸ்டில் சிங்கப்பூர் ஒருதலைப் பட்சமாகத் தன்னை முழு விடுதலைபெற்ற நாடாக அறிவித்துக் கொண்டது. 1963 ஆம் ஆண்டு செப்டெம்பரில் மலாயா, சாபா, சரவாக் ஆகியவற்றுடன் சேர்ந்து மலேசியக் கூட்டமைப்பைஉருவாக்கியது.
இரண்டு ஆண்டுகள் கழித்து சிங்கப்பூரில் ஆட்சியிலிருந்த மக்கள் செயர்
கட்சிக்கும் கோலாலம்பூரில் இருந்த மத்திய அரசுக்கும் இடையில் ஏற்பட்ட
கொள்கை வேறுபாடுகள் காரணமாக 1965 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி சிங்கப்பூர்,
மலேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி இறைமையுள்ள நாடானது. யூசோப் பின்
இஷாக் சிங்கப்பூரின் முதலாவது தலைவர் ஆனார். லீ குவான் யூ பிரதமராகத்
தொடர்ந்தார்.

சிங்கப்பூர் தன்னிறைவு பெற முயன்ற வேளையில், பெருமளவிலான வேலையின்மை,
வீட்டுப் பற்றாக்குறை, நிலம் மற்றும் இயற்கை வளப் பற்றாக்குறை போன்ற
பிரச்சினைகளை அந் நாடு எதிர் நோக்கவேண்டியிருந்தது. லீ குவான் யூ பிரதமராக
இருந்த, 1959 தொடக்கம் 1990 வரையான காலப்பகுதியில் பரவலான வேலையில்லாப்
பிரச்சினையைச் சமாளித்ததுடன், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திப்
பெருமளவிலான வீடமைப்புத் திட்டங்களும் அமைக்கப்பட்டன. இக் காலத்திலேயே
நாட்டின் பொருளாதார உள் கட்டமைப்புகள் வளர்ச்சியடைந்தன; இன முரண்பாடுகள்
கட்டுக்குள் கொண்டுவரப்பட்டன; ஆண்களுக்கான கட்டாய படைத்துறைச் சேவையே
அடிப்படையாகக் கொண்ட ஒரு சுதந்திரமான தேசிய பாதுகாப்பு முறை
உருவாக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் உலகிலேயே செல்வம் நிறைந்த நாடுகளில் ஒன்றாக மாறியது. அதன் ஆள்வீத மொத்த தேசிய உற்பத்தி, ஐரோப்பிய நாடுகள் பலவற்றைவிட அதிகமாக இருக்கிறது. சிங்கப்பூரின் துறைமுகம் உலகில் அதிக வர்த்தகக் கப்பல்களைக் காணும் ஒன்று.

பொருளாதாரம்

விடுதலைக்கு முன்பு இப்பகுதியிலிருந்த பிரித்தானிய குடியிருப்புக்களின்
தலைநகராக சிங்கப்பூர் விளங்கியது. பிரித்தானியரின் முதன்மை கடற்படை தளமாக
கிழக்காசியாவில் இது விளங்கியது. பிரித்தானியாவின் கடற்படை தளமாக
இருப்பதால் சிங்கப்பூரில் உலகின் பெரிய உலர் கப்பல் பராமரிக்கும் களம்
இருந்தது. சிங்கப்பூர் கிழக்கின் ஜிப்ரால்ட்டர் என்று அழைக்கப்பட்டது. சுயஸ் கால்வாய் திறந்ததால்
உலக வணிகத்தில் பெரிய வளர்ச்சி ஏற்பட்டது. அதனால் சிங்கப்பூர் வணிகத்தின்
முதன்மை வழியாக விளங்கியது. அதன் காரணமாக சிங்கப்பூர் துறைமுகம் உலகின்
பெரிய துறைமுகமாக மாறியது. விடுதலைக்கு முன்பு சிங்கப்பூரின் மொத்த
உள்நாட்டு உற்பத்தி நபர் ஒன்றுக்கு 511 டாலராக இருந்தது. இது அப்போது
கிழக்காசியாவில் மூன்றாவது உயர்வான நிலையாகும். விடுதலைக்கு பின்பு அன்னிய நேரடி முதலீடு மற்றும் சிங்கப்பூர் முன்னெடுத்த தொழிற்புரட்சிக்கான வழிகளும் அந்நாட்டை புதிய பொருளாதார நாடாக மாற்றியது.

தற்போதைய சிங்கப்பூர் சந்தை பொருளாதாரத்தின் மூலம் மிகவும்
முன்னேற்றமடைந்துள்ளது. சிங்கப்பூரின் பொருளாதாரம் முதலீட்டாளர்க்கு
உகந்ததாகவும் வணிக கட்டுப்பாடுகள் குறைந்ததாகவும் உள்ளது. இது உலகின் ஊழல்
குறைந்த நாடுகளில் ஒன்று. சிங்கப்பூர் உலகின் 14வது பெரிய
ஏற்றுமதியாளராகவும் 15வது பெரிய இறக்குமதியாளராகவும் உள்ளது. இசுடாண்டர்ட் அண்ட் புவர்சு, மூடிசு, பிட்ச் ஆகிய
மூன்று கடன் மதிப்பீடு நிறுவனங்களின் நாணயநிலை மதிப்பீட்டில் ஆசியாவில்
சிங்கப்பூர் மட்டுமே உயர் மதிப்பீடு (AAA) பெற்ற நாடாகும் [6][7].
ஐக்கிய அமெரிக்கா, நிப்பான், ஐரோப்பா ஆகியவற்றின் 7,000க்கும் மேற்பட்ட
பன்னாட்டு நிறுவனங்களின் கிளைகள் இங்குள்ளன. 1500 சீன, இந்திய
நிறுவனங்களின் கிளைகள் இங்குள்ளன. இங்குள்ள அனைத்து துறைகளிலும் வெளிநாட்டு
நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இந்தியாவின் இரண்டாவது பெரிய அன்னிய
முதலீட்டாளர் சிங்கப்பூராகும் [8]. சிங்கப்பூரின் தொழிலாளர்களில் கிட்டதட்ட 44 விழுக்காட்டினர் சிங்கப்பூர் குடிமக்கள் அல்லாத வெளிநாட்டினராகும்[9]. சிங்கப்பூர் பத்தாவது பெரிய வெளிநாட்டு நிதியிருப்பை கொண்டுள்ள நாடாகும்[10][11]. சிங்கப்பூரின் நாணயம்சிங்கப்பூர் வெள்ளியாகும், இதை வெளியிடுவது சிங்கப்பூர் பண அதிகார அமைப்பாகும். சிங்கப்பூர் வெள்ளியை புருனை வெள்ளியுடன் பரிமாற்றிக்கொள்ளலாம்.

சிங்கப்பூர் பொருளாதாராம் ஏற்றுமதியையே பெரிதும் நம்பி உள்ளது. இயந்திர
பொறியியல் துறை, உயிரிமருத்துவ அறிவியல் துறை, வேதிப்பொருட்கள், மின்னனு
பொருட்கள் போன்றவை ஏற்றுமதியில் பெரும் பங்கு வகிக்கின்றன. சிறிய நாடாக
இருந்தபோதிலும் சிங்கப்பூர் பன்முகத்தன்மை வாய்ந்த பொருளாதாரத்தை
கொண்டுள்ளது. இந்த உத்தியால் ஏதாவது ஒரு துறையில் பாதிப்பு ஏற்பட்டாலும்
அது நாட்டின் வளர்ச்சியையும் நிலைத்தன்மையையும் பாதிக்காது என அரசு
கருதுகிறது.

சிங்கப்பூர் வான்வெளி

இதன் பொருளாதாரத்தில் சுற்றுலாதுறையும் பெரும்பங்க வகிக்கிறது. 2007ம் ஆண்டு 10.2 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகைபுரிந்தார்கள் [14]. சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்கு சூதாட்ட இடங்களை 2005ல் அரசு அனுமதித்தது. மருத்துவ சுற்றுலாவின்மையமாக
தன்னை மேம்படுத்தும் முயற்சியில் சிங்கப்பூர் தீவிரமாக உள்ளது. ஒவ்வொரு
ஆண்டும் ஏறத்தாழ 200,000 வெளிநாட்டவர்கள் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக
சிங்கப்பூர் வருகிறார்கள். 2012ல் ஒரு மில்லியன் மருத்துவ சுற்றுலா
பயணிகளுக்கு மருத்துவம் பார்த்து 3 பில்லியன் அமெரிக்க வெள்ளியை வருமானமாக
பெற அரசு குறிக்கோள் கொண்டுள்ளது

நன்றி: arivulakam
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
சிங்கப்பூர்
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: இணைய உலகம்.-
Jump to: