2009 ஆம் ஆண்டிலிருந்து Facebook, Twitter போன்றவற்றின் கணக்குகளைத் திருட்டுபவர்களின் தொகை இரண்டு மடங்காகியுள்ளதாகவும் இதனால் அரைவாசிக்கு மேற்பட்ட இளைஞர்கள் மனப்பாதிப்புக்குள்ளாகுவதாகும் கூறப்படுகின்றது.
இதில் பத்தில் 3 பங்கு இளையோர்களினது கணக்குகள் களவாடப்படுகின்றது என்றும் கூறப்படுகின்றது.
திருடர்கள் பெரும்பாலும் பயனாளர்களின் கணக்குகளைச் செய்திகள் அனுப்புவதன்மூலம் கவனித்துக்கொள்வர்.
இதன் மூலமே யார் யார் உள்வருகின்றார்கள் என்பதை அப்பயனாளரும் அறிந்துகொள்வார்.
அமெரிக்காவில் நடாத்தப்பட்ட ஆய்வில் தமது கணக்குகளிற்குள் நுழைந்து திருடுபவர்கள் யாரென்பதைப் பெரும்பாலானவர்கள் தெரிந்துவைத்திருந்தனர்.
இதில் 72 வீதத்தினர் உளவு பார்ப்பதாகவும் 65 வீதத்தினர் திருடுவதாகவும் குறிப்பிட்டனர்.
ஒருவர் தவறுதலாகத் தனது கணக்கினைத் திறந்துவிட்டுச் சென்றபோது, அதனை அவரது இன்னொரு நண்பர் பாவித்துக் கருத்துக்களைத் தெரிவித்துக் குழப்பியடித்துவிட்டுச் சென்றிருந்தார்.
இவ்வாறான குழப்பத்திற்கு 6 மில்லியன் ருவிற்றர்களைக் கொண்டுள்ள நடிகர் Ashton Kutcher உம் இதனால் பாதிக்கப்பட்டவராவார்.