ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் மரணமடைந்தார். புற்றுநோயால்அவதிப்பட்டு வந்த அவர் நியூயார்க் நகரில் மரணமடைந்தார்.
அவருக்கு வயது(56) மிக அரிதான புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர் கடந்த ஆகஸ்ட்மாதத்தி்ல் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பி்ல் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய நவீன கணினி தொழில்நுட்ப புரட்சியில் முக்கிய இடம் வகித்து வருவது ஆப்பிள் நிறுவனம். ஐ பேடு வடிவமைப்பு மற்றும் தொழில் நுட்பத்தில் முன்னணியில் விளங்குவது.
இந்த நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ், கடந்த ஆகஸ்ட் வரை அதன் தலைவராகவும் இருந்தார். இவருடைய மரணம் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா, பில்கேட்ஸ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.