நேர முகாமைத்துவம் காலஎல்லை தவறிப்போகின்றதா? கட்டுரைகள் முடங்கிக் கிடக்கின்றனவா? தலைக்கு மேல் வேலை இருப்பதாக உணர்கிறீர்களா?
நேரத்தை எவ்வாறு பயனுள்ளதாக்கலாம் என்பதற்கான வழிமுறைகள் இதோ !
நேரத்தை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் அநாவசியமாக வீணடிக்கக் கூடாது. ஏந்த ஒரு துறையிலும் நேர முகாமைத்துவம் என்பது இன்றியமையாதது.
மாணவராக இருக்கும் போது நேர முகாமைத்துவம் என்பது இன்றியமையாதது. ஆகவே நேரத்தை எவ்வாறு முகாமைத்துவம் செய்யலாம் என அறிய வேண்டும்.
மாணவராக இருக்கும் போது, நீங்கள் நேர முகாமைத்துவத்தை கடைப்பிடிப்பீர்களானால் உங்கள் வேலைகள் உங்களுக்கு சுலபமாக நிறைவேறும் உங்கள் குறிக்கோளை நீங்கள் இலகுவில் அடையலாம்.
நீங்கள் எவற்றில் அதிகளவு நேரத்தை செலவிடுகின்றீர்கள் என கண்டறியுங்கள். ஒரு விடயத்தை செய்ய ஆரம்பிக்கும் போது அது கடினமாக காணப்பட்டால் நாளை அதை செய்யலாம் என்று விட்டுவிடாதீர்கள். இன்றே முடியுமான அளவிற்கு செய்வதற்கு முயற்சி செய்யுங்கள்.
மனதில் எப்போதும் ‘முடிந்தது’, ‘ஆம்’ என்றே எண்ணுங்கள். நேர முகாமைத்துவத்தை கடைப்பிடிக்க இன்னும் சில இலகுவாக வழிகள் உள்ளன.
நீக்குங்கள் !
உங்கள் வேலை என்ன என்பது பற்றி ஒரு குறிப்பு எடுங்கள் அல்லது ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யவும். அது உங்கள் நோக்கத்தை அடைய இலகுவாக இருக்கும்.
நீங்கள் நேரம் வீணடிக்கப்படுவதை நிறுத்தியதன் பின்பு, ஒரு நாட்குறிப்பை பேண ஆரம்பியுங்கள்.
அதில் நேர முகாமைத்துவத்தை கடைப்பிடிக்கும் போது எவற்றை தவர விட்டீர்கள் என்பதை குறித்துக் கொள்ளுங்கள்.
இன்று செய்ய வேண்டிய 100 விடயங்கள்.
‘ இன்றைக்கு செய்ய வேண்டியவை’ என்ற ஒரு பட்டியலை தயாரியுங்கள். கிழமைக்கும், அந்த மாதத்திற்கும் அவ்வாறான ஒரு பட்டியலை தயாரியுங்கள்.
உங்கள் பட்டியலில் உள்ள விடயங்களுக்கு எவற்றுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று அவதானமாக அவற்றை குறித்துக் கொள்ளுங்கள்.
விரைவில் நிறைவேற்ற வேண்டிய விடயங்களையும், காலம் தாழ்த்தி நிறைவேற்ற வேண்டிய விடயங்களையும் கலந்து குறித்துக் கொள்ளுங்கள்.
அப்போது தான், இதை இறுதியாக செய்து கொள்ளலாம் என்று நீங்கள் ஒதுக்கி வைக்கும் விடயங்களையும் செய்து முடிப்பீர்கள்.
இதில் இன்னொரு விடயத்ததையும் நீங்கள் கவனிக்க வேண்டும். அதாவது, உங்கள் மூலைக்கு ஓய்வு கொடுக்க மறக்க வேண்டாம்.
மற்றுமொரு முக்கியமான விடயம், உங்களை நீங்களே பயிற்றுவித்துக் கொண்டு இருக்கும் போது உங்களுக்கு ஒரு ஊக்குவிப்பினை கொடுக்க மறக்காதீர்கள். அது உங்களுக்கு ஒரு உற்சாகமாக அமையும்.
மகிழ்ச்சியாக இருப்பதற்கும் நேரம் ஒதுக்குங்கள்.
நீங்கள் உங்கள் வாழ்க்கையை சமநிலையாக்குங்கள். அதாவது, மற்றவர்களுக்காகவும் நேரம் ஒதுக்குங்கள், முக்கயமாக உங்களுக்காகவும் நேரம் ஒதுக்குங்கள்.
அவசரமாக இயங்கிக் கொண்டு இருக்கும் போது உங்கள் மனதிற்கும் உடலிற்கும் இவ்வாறன மாற்றுதல்கள் அவசியமாக காணப்படுகின்றது.
நன்றி: வணக்கம்.