*Admin Admin
Posts : 875 Join date : 22/04/2011
| Subject: தாயின் பெருமை அறிவோம். Tue May 17, 2011 9:26 am | |
| [You must be registered and logged in to see this image.]அம்மா! அவள் என்றால் எனக்கு உயிர் என்று உனக்கு நன்றாகவே தெரியும். அவளுக்கு கொடுக்க இப்போது என்னிடம் பணம் எதுவும் இல்லை. உன் இதயம் வேண்டும் என்று கேட்கிறாள். நீ அதை எனக்கு கொடுப்பாயா? அவளை பார்க்காமல் என்னால் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது" என்று கூறி அழுதான்.எந்த தாய்தான் மகன் கேட்டால், இல்லை என்று சொல்வாள்? உடனே அவள், "மகனே! என் இதயத்தை கொடுத்தால் அவள் உன்னுடனேயே இருப்பாளா?" என்று கேட்டாள். அதற்கு அவன் "இருப்பாள்" என்றான்.அந்தத் தாயும், தன்னை கொன்று இதயத்தை வெட்டி எடுத்துக் கொள்ளும்படி கூறினாள். அதன்படி, அந்த அன்பான தாயை கொன்ற அவன், தாசி கேட்டவாறு இதயத்தையும் தனியாக வெட்டியெடுத்தான். வலது கையில் அதை ஏந்தியபடி, தனது அன்புக்குரிய தாசி வீட்டை நோக்கி வேகமாக நடந்தான். செல்லும் வழியில் கல் தடுக்கி கீழே விழுந்தான். கையில் இருந்த தாயின் இதயமும் கீழே விழுந்தது.அந்த இதயம், கீழே விழுந்த அவனைப் பார்த்து, "மகனே வலிக்கிறதா? நான் உயிரோடு இருந்தால் உன் காயத்திற்கு மருத்துவம் பார்த்து இருப்பேனே?" என்றது.இப்படிப்பட்ட தாயையா எவளோ ஒருத்திக்காக வெட்டிக் கொன்றேன்?" என்று அப்போது அலறிய அவன், அங்கேயே உயிர் விட்டான்.தாயின் அன்பு எப்படிப்பட்டது என்பதற்காக சொல்லப்பட்ட கதை இது.அன்புக்கு உதாரணம்தான் தாய். ஒரு குழந்தையை பெற்றெடுக்கும் முன் எவ்வளவோ போராட்டங்களை ஒரு பெண் சந்திக்கிறாள். ஒரு வேளை அந்தக் குழந்தையை பெற்றெடுக்க காலதாமதம் ஆகிவிட்டால் மலடி என்றெல்லாம் கூட பட்டப் பெயர் வாங்கிக் கொள்கிறாள்.அந்தக் குழந்தை பிறந்து, அவள் தாயானதும் அக்குழந்தையை வளர்க்க எவ்வளவோ கஷ்டப்படுகிறாள்.அந்த உன்னத தாய் இன்று உயிரோடு இருந்தால், ஒரு தெய்வத்திற்கு இணையாக போற்றுங்கள். நடமாடும் தெய்வம் அவள் ஒருத்திதான். எந்த தாயும் தனது குழந்தை நல்ல வழியில் செல்ல வேண்டும், பிறர் போற்றும்படியாக வாழ வேண்டும் என்றுதான் ஆசைப்படுவாள். இதற்கு விதிவிலக்காக ஒரு சில தாயும் இருக்கலாம். இதுபற்றி விரிவாக அலச தேவையில்லை.எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் பெற்ற பிள்ளைக்காக வாழ்பவள்தான் தாய். அதனால்தான், இந்த பூமியைக்கூட பூமாதேவி என்கிறோம். நதிகளுக்குக் கூட பெண்ணின் பெயரை வைத்துத்தான் போற்றுகிறோம். | |
|