இணையத்தளங்கள் மூலமாகக் கல்வி கற்பது மிக கிளர்ச்சியூட்டுகின்ற மற்றும் சவாலான விடயமாகும்.
இது ஒரு மிகப் புதிதான மற்றும் வழமையற்ற ஒரு கல்வி முறையாகும்.
அத்துடன் தனிப்பட்ட முறையில் கற்கும் நபருக்கு ஒரு சவால் மிக்க விடயமும் கூடத்தான்.
துரதிர்ஷ்டவசமாக, இணைய கல்வி முறை புதிதான ஒன்றாக இருந்தாலும் கூட மாணவர்களுக்கு அதே பழைய பிரச்சினைகள் இருக்கின்றன.
தொடர்ந்து படிக்கும்போது அவர்கள் உந்துசக்தியை இழப்பது தான் பொதுவான விடயமாக உள்ளது.
இந்த உணர்வு ஒரே மாதிரியான சூழலில் இருந்து படிப்பதன் காரணமாக மோசமடைகிறது.
இந்த இணைய கல்வி முறை புதிதான கற்றல் முறையாக இருந்தாலும் வழமையான பாடசாலை கட்டமைப்பில் உள்ள ஒத்துழைப்பு முறை இல்லை.
இந்த ஒத்துழைப்பு முறைதான் மாணவர்களை தொடர்ந்து ஊக்கத்துடன் செயலாற்ற வைக்கிறது.
செய்யவேண்டியவற்றை செய்து முடிப்பதற்குத் தடையாக இந்த ஊக்கமிழப்பு அமைந்துவிடக் கூடும்.
படிப்பதற்கான உத்வேகத்தை இழப்பது தேர்வுக்கு தயாராவது, ஒப்படைகள் அல்லது திட்டங்களை முடிப்பது போன்றவற்றை கடினமானதாக்கிவிடும்.
படிப்பதில் சுவாரஸ்யமின்மையையும் இது ஏற்படுத்திவிடும். இணையதளங்களில் கல்வி கற்பதன் முழுக் காரணமும் ஊக்கமின்மையால் பயனற்றதாகிவிடும்.
ஒன்லைன் வகுப்புகளுக்கு பணம் செலுத்துவதை விட அதனை நிறுத்திவிடலாம்.
ஊக்கத்தை இழப்பதாக நீங்கள் கருதினால் அதனைத் தடுக்க கீழே சில வழிமுறைகள் தரப்பட்டுள்ளன.
ஊக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ள உங்கள் இலக்கை அடையாளங்கண்டு அதை நோக்கிச் செல்லுங்கள்.
எளிதாக செய்துமுடிக்கக்கூடிய இலக்கை மையப்படுத்தி முயற்சி செய்யுங்கள்.
அன்றாடம் மற்றும் வாரந்தோறும் செய்து முடிக்க வேண்டிய இலக்கினை ஒரு நாட்காட்டியில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
ஒவ்வொரு இலக்காக நீங்கள் செய்து முடிக்கும்போது அந்த நாட்காட்டியில் குறிப்பிட்ட இலக்கில் அடையாளமிடுங்கள்.
இது உங்களை பெருமிதமடையச்செய்யும்.
ஒன்லைன் வகுப்பில் நீங்கள் என்ன கற்றீர்கள் என்பதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இந்த முறை வகுப்புத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்ளக் கூடிய ஒன்று தான் ஆனால் இணைய கல்வி முறையில் அவ்வாறான வழமையான முறைமைகள் இல்லை.
நீங்கள் செய்யக்கூடியது, ஒன்லைன் வகுப்பில் கற்றுக்கொண்டது பற்றி உங்கள் குடும்பத்தினரிடமோ அல்லது நண்பர்களிடமோ கூறுவதுதான்.
வேறுவகையில் செய்யக்கூடியதென்றால் பாடத்திட்டம் குறித்து உங்கள் பயிற்றுவிப்பாளருடன் கதைப்பது.
உங்களுடன் இணையதளங்களில் கற்பவர்களை நீங்கள் நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு இல்லாத போதும் பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் chatrooms வசதிகளை மாணவர்களுக்கு ஒழுங்கு செய்து கொடுத்துள்ளன.
இதனைப் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் உங்கள் அருகில் ஒன்லைன் வகுப்பில் உங்களுடன் கல்வி கற்கும் ஒருவரைக் கண்டுபிடித்து அவரைச் சென்று சந்தித்து பாடம் தொடர்பாகக் கலந்துரையாடுவதை வழமையாக்கிக் கொள்ள முடியும்.
May 6th, 2011 அன்று featured,கல்வி பிரிவுகளில் பிரசுரிக்கப்பட்டது.